மக்களே உஷார்.. அடுத்த 2 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

0
மக்களே உஷார்.. அடுத்த 2 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு (மே 7,8) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மே 9 முதல் மே 13 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் இன்று (மே 7) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here