அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதற்கு ஈடான தொகையை நிறுவனமும், ஊழியர்களின் PF கணக்கில் வரவு வைத்து வருகிறது. இந்த தொகையை திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அவசர கால செலவுகளுக்கு, குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி., ராயல் ப்ளூவில் களமிறங்கும் வீரர்கள்.. முழு விவரம் உள்ளே!!
அப்படி PF கணக்கில் இருந்து பணம் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், அவருடைய விண்ணப்பம் பிராசஸ் செய்யப்பட்டு, 20 நாட்களுக்குள் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த காலக்கெடுவுக்குள் பணம் கிடைக்காவிட்டால் PF கமிஷனர் அல்லது EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.