தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்களை தயாராகி கொண்டு தேர்வுகள் எழுதி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அரையாண்டு தேர்வில் பார்த்து எழுதியதாக கூறி மாணவியை ஆசிரியர்கள் திட்டி உள்ளதாகவும், இதுவே அந்த மாணவி தற்கொலை செய்ய தூண்டியதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்கொலை செய்த மாணவி பயின்ற பள்ளி முதல்வர் மற்றும் 7 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அடக்கடவுளே.., KPY பாலாவுக்கு என்ன ஆச்சு? வெளியான ஷாக்கிங் புகைப்படம் – ரசிகர்கள் கவலை!!