அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவி தற்கொலை…, பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது அதிரடி வழக்கு பதிவு!! 

0
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்களை தயாராகி கொண்டு தேர்வுகள் எழுதி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அரையாண்டு தேர்வில் பார்த்து எழுதியதாக கூறி மாணவியை ஆசிரியர்கள் திட்டி உள்ளதாகவும், இதுவே அந்த மாணவி  தற்கொலை செய்ய தூண்டியதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்கொலை செய்த மாணவி பயின்ற பள்ளி முதல்வர் மற்றும் 7 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here