தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு, மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) மேற்கொண்டுள்ளார்.
அதன்படி ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க பரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தற்போது போல வெயிலின் தாக்கம் நீடிக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு 10 முதல் 15 நாட்கள் கூடுதலாக தள்ளி போக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.