தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிப்பதை தடை செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகளிடம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடை செய்யும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.