ஐபிஎல் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 22) சத்தீஸ்கர் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. பஞ்சாப் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது சாம் கர்ரன், பிரப்சிம்ரன், லிவிங்ஸ்டோன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால், 20 ஓவர் முடிவில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி., தனியார் மருத்துவக் காப்பீடு வசதி அறிமுகம்., ஜாக்பாட் அறிவிப்பு!!!
பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் குவிப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இதனால் 19.1 ஓவரிலே 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.