தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் பதிவாகி வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக, கடந்த ஏப்ரல் மாதம் முதலே கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, மே 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கு மே 1 முதல் மே 31 ஆம் தேதி வரை மட்டுமே கோடை விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.