தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய 22 மாவட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.