சின்னத்திரையில் டான்சராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என எக்கச்சக்க மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் விளம்பர நிறுவனமொன்று சாய் பல்லவியிடம் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளது. மேலும் அதற்கு ரூ. 2 கோடி சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கு அவர் அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இவரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.