தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது நாளை மே 10 ஆம் தேதி தேனியில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதன் காரணமாக நாளை (மே 10) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சஞ்சீவனா உத்தரவிட்டுள்ளார்.