தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான விவசாய நிலங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
வினாடிக்கு 3,000 கன அடி வீதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.