கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சொந்த மண் மற்றும் வெளியூர் தொடர்களில் மிகவும் சிறப்பாக விளையாடிய கோப்பையை கைப்பற்றி அசத்தினாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் சொதப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஆடவர் அணியானது, புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதைப்பற்றி முழு விவரம் தெரியவந்துள்ளது.
IPL 2024: CSK vs GT போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
அதாவது, தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டின் ஒப்பந்தம் வரும் T20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வர உள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.