தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், இன்று (மே 10) காலை 09.30 மணி அளவில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. கடந்தாண்டில் 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் “மேல்நிலை கல்விக்கு நுழைவாயிலாக உள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் வலிமையான அடித்தளத்தை உருவாக்க, திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்ளுங்கள்.” என முதல்வர் பாராட்டி உள்ளார்.