கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ, கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்து வந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்தியுள்ளதாகவும், அப்பெண்ணின் மகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மே 7) இந்த பகுதிகளில் விடுமுறை? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!!
அதன்பேரில் ரேவண்ணா வீட்டில் சோதனை நடத்தியதில், கடத்தி வைக்கப்பட்டு இருந்த பெண்ணை சிறப்பு புலனாய்வு குழு மீட்டனர். இப்படியாக அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை புகார் வருவது, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.