தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் `தொடர்ந்து கற்போம்’ எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?
அதன்படி தேர்வு முடிவு வெளியாகும் நாள் முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை, வாரந்தோறும் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, சிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.