IPL தொடரின் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 33 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 157 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.