சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த 2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே பல்துறை நிபுணர் குழு பரிந்துரையின் படி, தடை செய்யப்பட்டுள்ள 23 வகையான நாய் இனங்களை வளர்த்து வருபவர்கள், அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.