பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மனைவி கைது.., தீவிர விசாரணையில் போலீசார்கள்!!!

0
தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் பிரணவ் ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சட்டவிரோத பணம் மாற்றத்தில் ஈடுபட்டதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிலோ கணக்கில் நகைகள், ரொக்க பணம் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றதாக கூறப்பட்டது.
மேலும் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தலைமறைவான நிலையில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி உரிமையாளர் மதன் என்பவர் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திருச்சியில் செல்வராஜனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார். இதனால் காவல்துறையினர் இருவரையும் தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here