தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக CPS ஒழிப்பு இயக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர். இந்த சூழலில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் மாநிலம், 2060 ஆம் ஆண்டு 4.5 மடங்கிற்கு நிதிச்சுமையை சந்திக்க நேரிடும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் “தமிழ்நாட்டில் பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும். மற்ற கருத்துகளை ஏற்க வேண்டாம்.” என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தை (CPS) எதிர்த்து வருகிற 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குழந்தைக்கு இது கட்டாயம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!