டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இடைக்கால ஜாமீன் நிபந்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அம்மாடி.., TOXIC படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா.., ஆடிப்போன படக்குழுவினர்!!
இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் “கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், நேர்மையற்ற அரசியல்வாதிகளை குற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.” என குறிப்பிட்டுள்ளனர்.