தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் மக்களுக்கு ஏற்ப புது புது சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் சட்டத்தை பெல்ஜியம் அரசு நிறைவேற்றி இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது உலகிலேயே முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பெல்ஜியம் அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, மகப்பேறு விடுமுறை வழங்கவும் அரசு திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன நாடுடா இது, என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.