சமீபத்தில் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்ட சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகளை ஆபாசமாகப் பேசியதன் காரணமாக கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்களை, அவதூறு கருத்து கூற வைக்கும் வகையில் நேர்காணல் செய்பவர்களை, முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்.” என கருத்துக்களை தெரிவித்ததோடு மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.