தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தகுந்த முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தனுஷின் ராயன் படத்தின் முதல் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இன்று (மே 9) காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.