நாடு முழுவதும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழநதைகளை பாதுகாக்கும் வகையில் போக்சோ எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனையுடன் கர்ப்ப பரிசோதனையும் நடத்த வேண்டும். அப்படி கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் நலக் குழு அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும், அதேபோல் பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் மன நலனைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தளபதி விஜய் மகளுக்கு நடந்த குட் நியூஸ்.,, அவரே போட்ட பதிவு., குஷியில் ரசிகர்கள்!!!