கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று (மே 19) தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், மே 22ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை அறிவித்து இருந்தனர். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
IPL 2024 Playoffs: கொல்கத்தா vs ஹைதராபாத் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
இந்த நிலையில் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை திரும்ப பெறுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கனமழையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.