தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பரவலாக குறைந்துள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.