இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 75 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த சுஷாந்த் சிங் சிறப்பாக விளையாடி 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 262 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!