விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது தான் குக் வித் கோமாளி. இதுவரை 4 சீசன்கள் முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனில் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் என இருவரும் நடுவர்களாக இறங்க, புது கோமாளிகள் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் இனி வரும் எபிசோடுகளில் புதிய கோமாளியாக வர இருக்கும் பிரபலம் குறித்து இணையத்தில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இந்த நிகழ்ச்சியில், நடிகை ஃபரினா ஆசாத் புதிய கோமாளியாக இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து, மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை அறிந்த ரசிகர்கள் படு உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா குஜராத்?? RCB அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!