தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் ஏப்ரல் 15ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இன்றும் நாளையும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சுட்டெரிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.