இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு (NPCI) தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே கூகுள் பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு, UPI பரிவர்த்தனைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பங்கு இருக்கக்கூடாது என புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு தடைவிதிப்பதோடு, சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.