இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக வாடிக்கையாளர்கள், வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் 2 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது.
கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!
இந்நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 26) கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.