இன்றைய காலத்தில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்பின் என்ற ஆசிரியை தன் வீட்டின் வாசலில் நிற்கும் போது, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். அந்த சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கை 2 வருடங்களாக விசாரித்து வந்த காவல்துறை அந்த திருடன் கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் இவ்வழக்கை தள்ளுபடி செய்யும் படி வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் மேலும் ஒரு விசாரணை நடத்தி திருடியவரை கண்டுபிடித்து, நகையை மீட்டு தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக ரயில் பயணிகளே…, இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கிய சேவை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!