இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்து இருக்கும் சாதனை குறித்து காணலாம்.
அதாவது ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை எம்.எஸ் தோனி பெற்றுள்ளார். 42 வயதான தோனி முட்டியில் காயத்தை வைத்து கொண்டே இந்த அளவிற்கு அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
மதுரை வாழ் மக்களுக்கு நற்செய்தி., கள்ளழகர் திருவிழாவிற்கு சிறப்பு ஏற்பாடு., வெளியான முக்கிய தகவல்!!!