IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரஞ்சித் பட்டி தர் அதிரடியாக விளையாடி (50 ரன்கள்) அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் சபாஷ் அஹமத் 40 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!