இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்) ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சைக்கு இளைஞர் ஹேமசந்திரன் (26) சென்றுள்ளார். அப்பொழுது சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.