தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்., தங்களது ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!
அதாவது மின்சாரத்தை சேமித்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஊழியர்கள் அனைவரும் ‘அயர்ன்’ பண்ணாமல் உடைகள் அணிந்து வர வேண்டும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.