தமிழகத்தில் மிக்ஜாம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சென்னை, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.37,907 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரையிலும் வெள்ள நிவாரணத்தை வழங்காததால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தது. அதன்படி அவசர வழக்காக பரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு உறுதி அளித்துள்ளது.