மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8 வது ஊதியக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகள் இதுவரை வெளிவராவிட்டாலும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு கண்டிப்பாக தெரியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்படி அறிவிக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000ஆக உயர்த்தப்படலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.