தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. தற்போது இவர் இயக்கி, நடித்துள்ள “அரண்மனை 4” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மே 3ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் ரிலீஸாகி 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் அரண்மனை 4 படம் ரூ. 24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.