தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏகள் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல்:
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக.,வில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி தான் இதற்கு காரணம்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்னும் முதல்வர் வேட்பாளர் யார் என கட்சி சார்பில் முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இது குறித்து ஆலோசித்தனர். துணை முதல்வர் பன்னீர் செல்வம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் கூட தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய அறிவிப்பு:
செயற்குழு கூட்டத்தில் வரும் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக நிர்வாகம் கூறியுள்ளது. இப்படி ஒரு பரபரப்பான சூழலில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.,க்களும் வரும் 6ந் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று அதிமுக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
90s கிட்ஸ் கொஞ்சம் வளருங்கப்பா – தக்க பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!!
அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும், அக்டோபர் 6ம் தேதி சென்னை வர தலைமைக்கழகம் உத்தரவு.
— AIADMK (@AIADMKOfficial) October 2, 2020
எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.