நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி, தங்களது மக்களவை தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!
அதன்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில்,
- நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.
- பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்ச வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.