நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இப்போது பல்வேறு காரணங்களுக்காக இறுதி தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்போது தெலுங்கானா மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்புக்கான இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் இப்போது சில காரணங்களுக்காக இத்தேர்வு மீண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதுவரை மூன்று முறை இறுதித் தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்தேர்வுகள் முடிவடைந்தவுடன் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை கோடை விடுமுறை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.