இன்றைய காலகட்டத்தில் பலரும் பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு திட்டங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் தபால் அலுவலகங்களில் கிராம சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 19 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். 55 ஆண்டுகள் முதிர்வு கொண்ட இத்திட்டத்தில் தினமும் ரூ.50 என மாதம் ரூ.1,515 சேமித்து வந்தால், திட்டத்தின் முதிர்ச்சியை ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை பயனாளர் இறந்து விடும் பட்சத்தில், அந்த தொகை நாமினிக்கு சென்று விடும். மேலும் இத்திட்டத்தில் அவ்வப்போது போனஸ் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.