நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூர், மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 25) காலை 8 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த தடை உத்தரவு நாளை (ஏப்ரல் 26) மாலை வரையிலும் நீடிக்க இருப்பதால், மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர். இருந்தாலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு, இந்த 144 தடை உத்தரவு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.