இந்தியாவில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் பெறுவதற்கு நீண்ட நேரம் கவுண்டரில் காத்திருக்காமல், UTS செயலி மூலம் சுலபமாக டிக்கெட் பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ‘ஜியோ பென்சிங்’ கட்டுப்பாடு உள்ளதால், ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் மட்டுமே, செயலி மூலம் டிக்கெட் புக்கிங் செய்ய முடிந்தது.
மக்களே உஷார்.., தமிழகத்தில் மே மாதம் மழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக Unreserved டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் மற்றும் மின்சார ரயில் டிக்கெட்டுகளை, எங்கிருந்து வேண்டுமானாலும் புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனாலும் புக்கிங் செய்த 2 மணி நேரத்திற்குள் பயணத்தை ரயில் நிலையத்தை அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.