விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கால் எடுத்து வைத்தவர் தான் அர்ச்சனா. வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்து டைட்டிலை கைப்பற்றிய அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் அமைந்தது. மாயா, பூர்ணிமாவிற்கு எதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மனதில் நின்றார்.
இப்படி இருக்க சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் தான் சொன்ன கருத்து ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தனது டீனேஜ் பருவத்தில் ஒரு சந்தோசத்தை கூட அனுபவித்தது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது அவரது அப்பா தனது கல்லூரி தோழிகளுடன் கூட அவுட்டிங் செல்ல அனுமதிக்க மாட்டாராம்.
எப்படி கெஞ்சி பெர்மிசன் கேட்டாலும் கிடைக்காது. அடுத்த நாள் காலேஜ் போகும்போது எல்லாரும் அதை பத்தி தான் பேசுவாங்க. நம்ம போயிருந்தா நல்ல இருந்து இருக்குமேனு ஒரு ஏக்கம் இருந்துகிட்டே இருக்கும் அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் அப்படி சொன்னேன் என்று கூறிள்ளார்.