மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

0
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 5, 6) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.  அதேபோல் இன்று (ஏப்ரல் 5) குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here