தற்போது சினிமா நடிகர்களை போலவே சின்னத்திரை நடிகைகளும் புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத்திடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அனிதா சம்பத்:
பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் தான் அனிதா சம்பத். இவர் தற்போது திரைப்படங்களிலும், சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார். வெள்ளித்திரை நடிகர், நடிகைகைக்கு இணையாக டிவி வாசிப்பாளர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. அதேபோல் தான் அனிதா சம்பத். இவர் காதல் திருமணம் செய்து கொண்டது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.
இவர் 4 வருடங்கள் காதலித்து போன வருடம் அவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் தடவை பார்த்த நாளை 4 வது முறையாக கொண்டாடி வருகிறார் அனிதா சம்பத். தனது காதலை தினமும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் அனிதா சம்பத். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் தங்கள் காதல் குறையாது எனவும் கூறியுள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர்களின் பாசத்திற்காகவே பலர் இவரின் ரசிகர்களாக உள்ளனர். மேலும் இன்ஸ்டாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனிதாவிடம் ஒருவர் மெட்டி போடவில்லையா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதனால் கடுப்பான அனிதா சம்பத் அவர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு கூலாக பதில் சொல்லி இருக்கிறார்.
மெட்டி போடுவது என்னுடைய விருப்பம். இதனால் கலாச்சார சீரழிவு என்று யாரும் நினைக்க வேண்டாம். மேலும் இது தனக்கும் எனது கணவருக்குமான தனிப்பட்ட விஷயம். இதற்கான முழு சுதந்திரத்தையும் என் கணவர் எனக்கு அளித்துள்ளார். படங்களில் பள்ளிப் பெண்ணாக நடிக்கும் போது தாலி அணிந்திருப்பது எப்படி முடியும்.
மேலும் நமது கலாச்சாரம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எனக்கு வேலையும் முக்கியம். போட வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக போடுவோம். என்று கூறியுள்ளார். மேலும் 90s கிட்ஸ் கொஞ்சம் வளருங்க என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.