தமிழகத்தில் 10, 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், 4 முதல் 9ஆம் வகுப்பு இறுதி தேர்வு ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து இருந்தது. பின்னர் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 2 தேர்வுகள் மட்டும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனாலும் மதுரை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 23) கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றதால், கடைசி தேர்வு இன்று (ஏப்ரல் 24) நடைபெறுகிறது. இவர்களுக்கு நாளை (ஏப்ரல் 25) முதல் கோடை விடுமுறை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC குரூப் 4.., நல்லா படிச்சு இருக்கீங்களானு செக் பண்ண ஒரு வாய்ப்பு.., விவரம் உள்ளே!!