உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை பிடித்தம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
கொரோனா நோய் பரவல் காரணமாக பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
பொது முடக்கம் கடைபிடிக்கப்படுவதால், பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மாநில அரசு முடிவு:
இப்படியாக எல்லா மாநிலங்களிலும் இருக்கும் போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைச்சரவை பொது கூட்டம் நடைபெற்றது, அதில் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் எடுத்து கோலா படும் என்று ஆளும் கட்சி சார்பில் கூறப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், அது போன்ற எந்த நடவடிக்கையும் பாஜக அரசு எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம் சுமத்தபட்டுவந்தது. இதற்கு முடிவு கட்டும் விதமாக பாஜக அரசு எம்எல்ஏக்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை 30 சதவிகித சம்பள பணம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.